ஐபில் 2025: பெங்களூரு அணி வெற்றிநடை தொடருமா? வலை பயிற்சியில் RCB ,குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்!

Velmurugan s | Updated : Apr 02 2025, 01:01 PM
Share this Video

ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூருவில் நடைபெறும் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.பெங்களூரு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, சால்ட் அதிரடியாக ஆடி வருகின்றனர். குஜராத் அணியில் பேட்டிங் ஆர்டர் அசுரபலத்துடன் காட்சியளிக்கிறது. சாய் சுதர்சன் நல்ல ஃபார்மில் உள்ள நிலையில், சுப்மன் கில், ஜாஸ் பட்லர் ஆகியோரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இறுதிக்கட்ட ஓவர்களில் ஷாருக்கான், டெவாட்டியா அதிரடி காட்டும் பட்சத்தில் குஜராத் அணி இமாலய இலக்கை எட்டலாம். நல்ல ஃபார்மில் இருக்கும் பெங்களூரு அணி சொந்த மண்ணில் பலம் வாய்ந்த குஜராத் அணியுடன் மோதுவதால் பரபரப்பாக போட்டியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Video