- Home
- Sports
- Sports Cricket
- ஹர்திக் பாண்ட்யாவுடன் கைகுலுக்குவதை தவிர்த்தாரா சுப்மன் கில்? நெட்டிசன்கள் விளாசல்!
ஹர்திக் பாண்ட்யாவுடன் கைகுலுக்குவதை தவிர்த்தாரா சுப்மன் கில்? நெட்டிசன்கள் விளாசல்!
குஜராத் டைட்டன்ஸ் மும்பை இந்தியன்ஸ் போட்டியில் டாஸின்போது ஹர்திக் பாண்ட்யாவுடன் கைகுலுக்குவதை சுப்மன் கில் தவிர்ப்பதுபோல் வீடியோ பரவி வருகிறது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Shubman Gill avoids handshake with Hardik Pandya
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 228 ரன்கள் குவித்தது.
பின்பு விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 08 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிக ரன்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குஜராத் கேப்டன் சுப்மன் கில் வெறும் 1 ரன்னுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
ஹார்திக் பாண்ட்யாவுடன் கைகுலுக்குவதை தவிர்த்த சுப்மன் கில்
இந்த தோல்வியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் 2025 சீசனில் இருந்து வெளியேறியது. மும்பை இந்தியன்ஸ் அணி 2வது எலிமினேட்டர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.
நேற்றைய போட்டிக்கு முன்னதாக டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். டாஸ் முடிந்ததும் ஹார்திக் பாண்ட்யா, குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுடன் கைகுலுக்க சென்ற நிலையில், அவர் அதை தவிர்த்தார்.
சுப்மன் கில்லுக்கு ரசிகர்கள் கண்டனம்
பொதுவாக டாஸ் போடும்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் ஹர்திக் பாண்ட்யா கைகுலுக்க சென்ற நிலையில், ஆனால் சுப்மன் கில் அதை தவிர்த்தது ரசிகர்களிடம் பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது.
இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், ''சுப்மன் கில் செய்தது தவறு. ஒரு கேப்டன் இப்படி ஈகோவுடன் இருந்தால் அது சரியல்ல'' என்று கூறி வருகின்றனர்.
குஜராத் டைட்டனஸ் அணியில் இருவரும் விளையாடினார்கள்
ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டனஸ் அணியின் கேப்டனாக 2 ஆண்டுகள் இருந்தபோது சுப்மன் கில் அவருக்கு கீழ் விளையாடினார். ஹர்திக் பாண்ட்யா தலைமையில் குஜராத் அணி 2022ல் கோப்பையையும் வென்றது.
ஒரே அணியில் விளையாடியதால் ஹர்திக் பாண்ட்யாவுக்கும், சுப்மன் கில்லுக்கும் இடையே நல்ல புரிதல் உண்டு. அதன்பிறகு பாண்ட்யா குஜராத் அணியில் இருந்து வெளியேறி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆனது குறிப்பிடத்தக்கது.
கடும் கோபத்துடன் காணப்பட்ட சுப்மன் கில்
இருவரும் ஒரே அணியில் சேர்ந்து விளையாடியபோதும், சுப்மன் கில்லின் ஈகோவே அவர் ஹார்திக் பாண்ட்யாவுடன் கைகுலுக்குவதை தவிர்த்ததாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக களத்தில் அமைதியாக காணப்படும் சுப்மன் கில் நேற்றைய போட்டியில் கோபத்துடன் இருந்ததை பார்க்க முடிந்தது.
பிரசித் கிருஷ்ணா பந்தில் மும்பை வீரர் ஜானி பேர்ஸ்டோ சிக்சர் அடித்ததும் பிரசித் கிருஷ்ணாவிடம் கில் கடுமையாக கோபப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.