- Home
- Tamil Nadu News
- School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை ஒட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Valvil Ori Festival
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாள்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: School, Colleges Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆகஸ்ட் 3ம் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
School Holiday
அதன்படி, நடப்பு ஆண்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதி ஆகிய 2 நாட்கள் தமிழக அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளது. இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர், குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து, விழாவில் கலந்துகொள்ளும் வகையில், 3ம் தேதி (ஆடி மாதம் 18-ஆம் நாள்) சனிக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Government Office
இந்த உள்ளூர் விடுமுறை நாளில் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Colleges Holiday: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எப்போது தெரியுமா? வெளியான குட்நியூஸ்!
School Working Day
மேலும், இந்த உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் விதமாக வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.