நாகையில் மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான விவசாய கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற நாகூர்தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் பகுதிகளில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு முடி திருத்தம் செய்து புதிய உடை அணிவித்து காப்பகத்தில் ஒப்படைத்து மறுவாழ்வு அளித்த தன்னார்வலருக்கு குவியும் பாராட்டுக்கள்.
2 வருடமாக ஒன்றாக பழகிய காதலன் திடீரென வேறொரு பெண்ணை காதலிக்கத் தொடங்கியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவி காதலனுடன் சேர்த்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக புகழ்பெற்ற திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற உறவினர் நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மனைவி சௌமியா அன்புமணி பங்கேற்பு.
மயிலாடுதுறையில், வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் தேர்தல் நாளில் போராட்டம் நடத்திய பாமக மாவட்ட தலைவர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தும் கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணால் பரபரப்பு.
தஞ்சையில் தனியார் சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினை வழிமறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை அருகே மணலூரில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வயல்களில் கிடை போடுவதற்கு ஆடுகளை ஏற்றி வந்த லாரி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 75 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் இறைவழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். விழாவின் ஒரு பகுதியாக சீடர்களின் பாதங்களை கழுவி திருப்பலி நிறைவேற்றம்: