மத்திய அரசு கொடுக்கும் நெருக்கடி தற்காலிகமானது - ஐ.லியோனி பேச்சு
கீழடி மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அனைத்து அகழாய்விழும் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் இரும்பு பயன்படுத்தியுள்ளது, இரும்பின் மூலம் ஆயுதங்கள் உற்பத்தி செய்து இருக்கின்றது, இரும்பை உருக்க ஆயிரம் டிகிரி செல்சியஸ் வேண்டும் அந்த டெக்னிக்கை பயன்படுத்தி தமிழினம் கடைப்பிடித்து இருக்கின்றது. பானை ஓடுகளில் இருக்கப்படும் எழுத்துக்களுக்கு அன்றைய கால பெண்களே காரணம் எனவும், அவர்கள் அவ்வளவு அறிவாற்றல் உடைய தமிழ் இன மக்கள், சிந்து சமவெளி நாகரீகத்திற்கும், தமிழ் நாகரீகத்திற்கும் தொடர்பு இருக்கின்றது அதை ஆர் பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பண்பாட்டின் பயணம் என்ற நூலில் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றது.