தற்போதைய செய்திதமிழ்நாடுசினிமாஆட்டோவர்த்தகம்விளையாட்டுலைஃப்ஸ்டைல்ஜோதிடம்இந்தியாஉலகம்கேலரிவேலை வாய்ப்புதொழில்நுட்பம்ஆரோக்கியம்ஆன்மிகம்KEA 2025

மும்பையை பந்தாடிய ஒன்மேன் ஆர்மி – பஞ்சாப் கிங்ஸை தூக்கி நிறுத்திய ஷ்ரேயாஸ் ஐயர்!

Rsiva kumar | Published : Jun 2, 2025 3:19 AM

Punjab Kings IPL 2025 Qualifier 2 : ஐபிஎல் 2025 தகுதிச்சுற்று 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

16
ஐபிஎல் 2025 தகுதிச்சுற்று 2: மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்

Punjab Kings IPL 2025 Qualifier 2 : மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. இறுதியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. மும்பை அணி 20 ஓவர்களில் 203/6 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

26
ஞ்சாப் அணி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற, பஞ்சாப் அணி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பஞ்சாப் அணி இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

36
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி

ச்யின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அபார பேட்டிங்கால் ரன்களை குவித்தனர். முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் நாக் ஆடிய ஹிட்மேன் ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் ஏமாற்றமளித்தார். வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

46
ஜானி பேர்ஸ்டோ 38 ரன்கள்

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 38 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 44 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் இந்தப் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இறுதியில் நமன் தீர் 37 ரன்கள் எடுத்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்கு 204 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களில் உமர்ஜாய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

56
204 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ்

204 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 6 ரன்களுக்கு பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை இழந்தார். பிரியன்ஷ் ஆர்யா 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜோஸ் இங்கிலீஸ், ஸ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா ஆகியோர் சிறப்பாக ஆடி பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

66
ஷ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள்

ஜோஸ் இங்கிலீஸ் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். நேஹல் வதேரா 48 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமான அரைசதம் அடித்து பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அவர் 41 பந்துகளில் 5 பவுண்டரி 8 சிக்ஸர் உள்பட 87 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக சிக்ஸர் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Latest Videos

Recommended Photos