ஆரோக்கியமாக இருக்க ஃபாலோ பண்ணக் கூடாத 5 டயட் பிளான்கள்!!
நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க பின்பற்றக் கூடாத ஐந்து வகை டயட் பிளான்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Most Dangerous Diet Plans to Avoid
தற்போது எடையை மிக எளிதில் குறைக்க பலவிதமான டயட் பிளான்கள் மக்கள் மத்தியில் ட்ரண்டாகி வருகின்றன. அவற்றில் சில வகையான டயட் பிளானானது ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்குவதற்கு பதிலாக, தீங்கு விளைவிக்கும். எனவே நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ, பின்பற்றக்கூடாத சில அபாயகரமான டயட் வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குறைவான உப்பு அல்லது உப்பு சேர்க்காத உணவுகள் :
உணவில் குறைவாக உப்பு சேர்ப்பது உயர் இரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்லது. ஆனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் , குறைந்த அளவு உப்பு சேர்ப்பது அல்லது உப்பை சேர்க்காத உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு தீமை தான் விளைவிக்கும். ஏனெனில் உப்பு தான் நம்முடைய உடலில் திரவ அளவை சமநிலையில் வைக்கவும், நரம்புகளின் சீரன செயல்பாடுக்கும், தசை சுருங்கி விரியவும் உதவுகிறது. உப்பை நீங்கள் முழுமையாக தவித்தால் உடலில் சோடியத்தின் அளவு குறைந்துவிடும். இதன் விளைவாக அதிகப்படியான உடல் சோர்வு, தசை பிடிப்பு, இதே நோய் போன்ற அபாயம் ஏற்படும். எனவே உடல் நன்றாக இருக்க குறைந்த அளவில் உப்பு சேர்ப்பது மிகவும் அவசியம்.
கொழுப்பே இல்லாத உணவுகள் :
சில எடையை மிக வேகமாக குறைக்க தங்களது உணவில் கொழுப்பு அறவே சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நட்ஸ்கள், அவகாடோ போன்றவற்றில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியம், மூளையின் செயல்பாடு, ஹார்மோன் உற்பத்தி போன்றவற்றிற்கு மிகவும் அவசியம். கொழுப்பை தவிர்க்கும் போது உடலில் கொழுப்பு அமிலங்களின் அளவு குறைந்து விடும். இதன் விளைவாக சருமம் வறண்டு போகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும், அதிகப்படியான உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பட்டினி கிடப்பது :
உடல் எடையை குறைக்க சிலர் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவது மற்றும் தொடர்ந்து சில நாட்கள் உணவு சாப்பிடாமல் இருக்கும் பழக்கத்தை பின்பற்றுவார்கள். ஆனால் இந்த பழக்கம் உடலில் தசை மற்றும் நீரின் அளவை குறைத்து உடலை மெலிதாக்குமே தவிர, உடலில் இருக்கும் கொழுப்பு குறையாது. இதுதவிர, மெட்டபாலிச ரேட்டும் குறையும். உடலில் போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லை என்றால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். அதுமட்டுமின்றி மீண்டும் பழைய உணவு முறையை பின்பற்றினால் எடை வேகமாக அதிகரிக்கும்.
பழசாறுகளை அதிகம் எடுத்துக் கொள்வது :
பழசாறுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் கல்லீரல் மற்றும் கிட்னியில் நச்சுக்களை நீக்கும் என்றாலும், உடலில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தும் மற்றும் டீஹைட்ரேஷனை உண்டாக்கும். ஆகவே இந்த டயட் முறை தேவையில்லாதது. அதிக நார்ச்சத்து உள்ள காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவை உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற தேவையானது.
முட்டைக்கோஸ் சூப் :
சிலர் அதிக அளவு முட்டைக்கோஸ் சூப் எடுத்துக் கொண்டு பிற உணவுகளை குறைத்து எடையை குறைக்கிறார்கள். இந்த முறை டயட்டில் எடை குறைவதற்கு முக்கிய காரணம் உடலில் ஊட்டச்சத்துக்களும், நீர்ச்சத்தும் குறைவாக இருப்பது தான். இந்த டயட் பிளானை பின்பற்றினால் உடல் ஆற்றல் இழக்கப்படும், ஊட்டச்சத்துக்கள் சமநிலையற்று போய்விடும், குறைந்து விடும். இந்த டயட்டை முடித்த பிறகு மீண்டும் பழைய உணவு முறைக்கு திரும்பினால் உடல் எடை அதிகரிக்கும்.
குறிப்பு : ஆகவே இந்த மாதிரியான டயட் பிளான்கள் ஏதும் பின்பற்றாமல் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க சரிவிகித உணவுகள், தினமும் உடற்பயிற்சி, நல்ல உறக்கம், மன ஆரோக்கியம் போன்றவை பின்பற்றினால் போதும்.