நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த பதிவில் அதன் அறிகுறிகள் மற்றும் அதை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Common Symptoms of Too Much Exercise : நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி நம்முடைய உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கினாலும், அதை அளவுக்கு அதிகமாக செய்யும் போது அது நமக்கே வினையாகிவிடும். ஆம், அதிகப்படியான உடற்பயிற்சிகள் தசைப்பிடிப்பு மாரடைப்பு போன்ற போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், நாம் அதிகப்படியான உடற்பயிற்சி செய்யும் போது உடலில் சில அறிகுறிகள் தென்படும். அதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம் இந்த பதிவில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிக உடற்பயிற்சியால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:

ஒரு நபர் நாள் ஒன்றுக்கு சுமார் 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்யலாம். அதுவே வாரத்திற்கு 15 நிமிடங்கள். சிலர் வயதிற்கு ஏற்ப கூடுதலான கடுமையான உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால் அதிகப்படியான உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருக்கும் கலோரிகள் மிகவும் விரைவாக குறைந்து, பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அதாவது அதிக உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருக்கும் ஆற்றல் இழக்கப்படுகிறது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை பிரச்சனை ஏற்பட்டு உடல் பலவீனமாகும். இது தவிர இதயம், குடல் போன்ற உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். பெண்களுக்கோ ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் இழப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் இனப்பெருக்க அமைப்பில் பாதிப்பு மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

அதிக உடல் வலி:

நீங்கள் தினமும் தீவிரமாக உடற்பயிற்சி செய்தால் தசைகள் அதிகமாக இறுகி தீவிர வலியை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி உடலானது மிகவும் பலவீனமடையத் தொடங்கும். மேலும் உடலில் காயங்கள் ஏற்பட்டுவதற்கு வழிவகுக்கும். அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் வெளிப்புறத்திற்கு பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தாலும், நாளடைவில் உடல் வலிமையை இழந்து தொற்று நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

அதிகப்படியான காயங்கள்:

நீங்கள் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக ஓடினால் தடை பகுதியில் பிளவுகள், எலும்புகளில் முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் இதனால் காயங்கள் கூட உங்களை அறியாமலேயே ஏற்படும். இந்த காயங்கள் அதி தீவிர பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இப்போது இந்தப் பிரச்சினையை நீங்கள் எதிர்கொண்டால் சில நாட்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது தான் நல்லது. இல்லையெனில் தசைகளின் அதிக அழுத்தத்தின் காரணமாக மன அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஏற்படும். மாரடைப்பால் உயிரிழப்பு கூட நேரிடும்.

அதிகப்படியான சோர்வு!

பொதுவாக உடற்பயிற்சி செய்த பிறகு சோர்வு வருவது இயல்பானது தான். ஆனால் அதிகப்படியான சோர்வு அதிதீவிர உடற்பயிற்சியின் அறிகுறி. அதுமட்டுமின்றி உடற்பயிற்சி செய்யும் முன் உங்களது உடல் அதிக அளவு சோர்வாக இருப்பது நல்லதல்ல. அது உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து போதிய அளவு இல்லாததுதான்.

அசாதாரண எடை இழப்பு!

அதிதீவிர உடற்பயிற்சியானது அதிகப்படியான எடையிடப்பு பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, அதிகமான உடற்பயிற்சி செய்தால் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும். பசியின்மை காரணமாக உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொடுக்க தவறி விடுகிறோம். இதனால் பல உடல் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஆகவே, உடற்பயிற்சி செய்யும் போது சாதாரணமாக எடை குறையாமல், அசாதாரணமாக எடை குறைந்தால் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

தூக்கமின்மை:

அதிகமாக உடற்பயிற்சி செய்யும் போது மன அழுத்த ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு, தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். உடலுக்கு போதுமான அளவு ஒய்வு கிடைக்கவில்லை என்றால், உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சரியான தூக்கம் இல்லை என்றால் உடல் சோர்வு, பதட்டம், எரிச்சல், மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

அதிக உடற்பயிற்சி செய்வது தடுக்க என்ன செய்வது?

- அதிக உடற்பயிற்சியால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய ஓய்வு மிகவும் அவசியம். எனவே உடற்பயிற்சி செய்வதை கொஞ்ச நாட்கள் நிறுத்தி வைக்கலாம்.

- மன அழுத்தம், பதட்டம், எரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்க வீட்டிலிருந்தே தியானம், யோகா போன்ற பயிற்சிகளை செய்யலாம்.

- தசை பிடிப்பு, வலி ஏற்பட்டால் மசாஜ் செய்வதன் மூலம் அதை சரி செய்து விடலாம். முக்கியமாக வெந்நீரில் குளித்தால் சற்று நிவாரணம் கிடைக்கும்.

- கடினமான பணிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

- உங்களது உடல் இப்பொழுது உடற்பயிற்சி செய்ய தயாராகி விட்டது என்று நீங்கள் மீண்டும் உடற்பயிற்சி செய்ய விரும்பினால், மருத்துவரிடம் முதலில் அணுக வேண்டும்.

குறிப்பு :

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி போல அதிகப்படியான உடற்பயிற்சியும் உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே எதையும் அளவோடு செய்யுங்கள். ஆரோக்கியத்துடன் இருங்கள். இதனால் உயிரிழப்பை தவிர்க்கலாம்.