நீலகிரியில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் ஒற்றை கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த மக்னா யானை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. இது அப்பகுதி மக்களிடையே கவலையை உண்டாக்கி உள்ளது.
நீலகிரியில் பிரபல தனியார் உணவகத்தில் வழங்கப்பட்ட சாம்பாரில் எலி இறந்து கிடந்த நிலையில், உணவகத்திற்கு தற்காலிகமாக சீல் வைத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீலகிரியில் நவராத்திரி தொடக்க விழாவில் சாகசம் செய்ய முயன்ற மாணவியின் முகத்தில் தீ காயம் ஏற்பட்டதால் பரபரப்பு.
கோத்தகிரியில் சர்வசாதாரணமாக குடியிருப்பு வளாகத்தில் உலா வரும் கருஞ்சிறுத்தையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நீலகிரியில் முதியோர் இல்லம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் முதியவர்கள் நடனமாடியதை பார்த்து தேம்பி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டிக்கு சுற்றுலா வந்து திரும்பிக்கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 57 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை வனத்துறை ஊழியர் ஒருவர் லாவகமாக குச்சியை வைத்து காட்டுக்குள் விரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த சுற்றுலா பேருந்து விபத்து குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஏற்பட்ட சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத்தை அறிவித்துள்ளார்.