பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் மருது பாண்டியர் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 27, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் திறக்கக் கூடாது எனவும், விதி மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.